ஆவுடையார் கோயில் அருகே ஒக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பில்லாமல் பள்ளி வளாகத்தில் ஆழமான குளம் உள்ளது.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முள்வேலி அமைத்துத் தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன்வர வேண்டுமென அப்பள்ளியில் பயிலும் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.