சிங்காநல்லூர் - Singanallur

போலீஸ் சலவை பவுடர் தயாரித்த 3 நிறுவனங்கள் மீது வழக்கு!

போலீஸ் சலவை பவுடர் தயாரித்த 3 நிறுவனங்கள் மீது வழக்கு!

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). இவர் பிரபல சலவை பவுடர் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கோவையில் சலவை பவுடர் போலியான மமுறையில் தயாரிக்கப்பட்டு விற்பதை அறிந்த அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து அதிகாரிகள் கோவையில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நஞ்சேகவுண்டர் வீதி மற்றும் தாமஸ் வீதி பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று தனியார் நிறுவனங்கள் பிரபல சலவை பவுடர் நிறுவனத்தின் பெயரில் போலியான சலவை பவுடர் பாக்கெட்டுகள் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து புகாரின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் அந்த மூன்று நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా