கூடலூர் - Gudalur

உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்

நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி பகுதியில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடையில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். முதுமலை வனப்பகுதி தற்போது பசுமையாக காட்சியளித்து வரும் நிலையில் ஏராளமான வனவிலங்குகள் சாலை ஓரம் உலா வருகின்றன இந்த நிலையில் கார்குடி பகுதியில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடைக்குள் இன்று திடீரென கரடி நுழைந்தது பயனியர் நிழற்குடையில் யாரும் இல்லாததால் ஒரே இடத்தில் சுற்றி முற்றிப் பார்த்த கரடி பின்பு மெதுவாக வெளியேறி வனப்பகுதிக்குள் ஓடியது இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர் கரடி பயணியர் நிழற்குடைக்கு வந்தது பேருந்திற்காகவோ? என அப்பகுதி மக்கள் நகைச்சுவையுடன் பேசிக்கொண்டனர்.

வீடியோஸ்


நீலகிரி
Jul 14, 2024, 14:07 IST/உதகமண்டலம்
உதகமண்டலம்

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Jul 14, 2024, 14:07 IST
உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது இந்திரலையில் உதகையிலிருந்து கோத்தகிரி செல்லக்கூடிய சாலையில் உள்ள கார்ஸ்வுட் இரண்டாவது வலைவில் பகுதியில் திடீரென ராட்சதமரும் சாலையில் விழுந்தது இதனால் உதகையிலிருந்து கோத்தகிரி சென்ற வாகனங்களும் கோத்தகிரியில் இருந்து உதகை நோக்கி வாகனங்கள் நிறுத்தப்பட்டன இத நாள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர் ஒரு பகுதியில் மரம் அறுக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது மரம் விழுந்த இடத்தில் வாகனங்கள் ஏதும் நிறுத்தாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது சாலை ஓரங்களில் உள்ள ராட்சத மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தவோ பொதுமக்கள் நிற்கவ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.