![](https://media.getlokalapp.com/cache/7e/30/7e309c397967dc73c5825cebe6ad77c7.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி பகுதியில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடையில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். முதுமலை வனப்பகுதி தற்போது பசுமையாக காட்சியளித்து வரும் நிலையில் ஏராளமான வனவிலங்குகள் சாலை ஓரம் உலா வருகின்றன இந்த நிலையில் கார்குடி பகுதியில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடைக்குள் இன்று திடீரென கரடி நுழைந்தது பயனியர் நிழற்குடையில் யாரும் இல்லாததால் ஒரே இடத்தில் சுற்றி முற்றிப் பார்த்த கரடி பின்பு மெதுவாக வெளியேறி வனப்பகுதிக்குள் ஓடியது இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர் கரடி பயணியர் நிழற்குடைக்கு வந்தது பேருந்திற்காகவோ? என அப்பகுதி மக்கள் நகைச்சுவையுடன் பேசிக்கொண்டனர்.