சுற்றுலா வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி
கோத்தகிரி நியாங் பகுதியை சேர்ந்த புலேந்திரன், 25. மினி பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இரவு, 9: 00 மணியளவில் ஊட்டியில் இருந்து, வீட்டிற்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சுற்றுலா வாகனம் கட்டபெட்டு பகுதியில் மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் புலேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திருவாரூர் பகுதியை சேர்ந்த சுற்றுலா வாகன டிரைவர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.