கூடலூர் - Gudalur

சுற்றுலா வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

சுற்றுலா வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

கோத்தகிரி நியாங் பகுதியை சேர்ந்த புலேந்திரன், 25. மினி பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இரவு, 9: 00 மணியளவில் ஊட்டியில் இருந்து, வீட்டிற்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சுற்றுலா வாகனம் கட்டபெட்டு பகுதியில் மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் புலேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திருவாரூர் பகுதியை சேர்ந்த சுற்றுலா வாகன டிரைவர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


நீலகிரி
புதிய நீதிமன்றம் கட்ட வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
May 01, 2024, 14:05 IST/குன்னூர்
குன்னூர்

புதிய நீதிமன்றம் கட்ட வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

May 01, 2024, 14:05 IST
கோத்தகிரி வக்கீல்கள் சங்க செயற்குழு கூட்டம் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைந்து நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்துடன், கோத்தகிரி வக்கீல்கள் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடப்பாண்டில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக பாலசுப்ரமணி, துணைத்தலைவராக ரவி, செயலாளராக கோபிநாத், பொருளாளராக முருகன், இணைச் செயலாளராக கவிதா, செயற்குழு உறுப்பினர்களாக மணிக்குமார், மாதன், மோகன், ராதாகிருஷ்ணன், நஞ்சன், உதய்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.