கரூர்: டூவீலரில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்து

52பார்த்தது
கிழக்கு தோட்டக்குறிச்சியில் டூவீலரில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்து.கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவானந்தம் வயது 39.இவர் ஜனவரி 16ஆம் தேதி மாலை 3 மணி அளவில் கிழக்கு தோட்டக்குறிச்சியில் இருந்து தவிட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.இவரது வாகனம் கிழக்கு தோட்டக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, சாலையை கடந்து செல்வதற்காக டூவீலரை திருப்பி உள்ளார். 

அப்போது வேலாயுதம்பாளையம், காந்தி நகர், 8-வது தெருவை சேர்ந்த பழனிச்சாமி வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், அறிவானந்தம் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் அறிவானந்தத்திற்கு தலை, வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அறிவானந்தம் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் நேற்று இது தொடர்பாக, காரை விபத்து ஏற்படும் வகையில் வேகமாக ஓட்டிய பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி