
கரூர்: பெண் ஊழியரை திட்டி மிரட்டிய ஊழியர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லதா 30. இவர் சித்தலவாயில் உள்ள ஸ்மால் பேங்கில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கடந்த 4 ஆண்டுகளாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் வேலை பார்க்கும் கட்டிடத்தின் அருகே ஸ்ரீராம் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் என்பவருடன் பழகி வந்ததாகவும் இந்த நிலையில் பழக்கம் பிடிக்காமல் பேசுவதை நிறுத்திவிட்டார். இதை ஹரிஷ் தகாத வார்த்தைகளால் திட்டி உன்னை அடையாளமிடமாட்டேன் என கூறிச் சென்றுள்ளார். ஐஸ்வர்யா லதா புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.