கிருஷ்ணராயபுரம் - Krishnarayapuram

அதிகப்படியான காய்ச்சல். மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு.

அதிகப்படியான காய்ச்சல். மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் அருகே உள்ள மேற்கு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி வெங்கலட்சுமி வயது 87. இவருக்கு கடந்த ஒரு வார காலமாகவே அதிகப்படியான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அவரது வீட்டின் அருகே நடந்து சென்ற போது வெங்கலட்சுமி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த வெங்கலட்சுமி சிகிச்சை பலனின்றி மே 3-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த அவரது மகன் கணேசன் வயது 57 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த வெங்கலட்சுமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல் துறையினர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా