கேரளாவில் இளம்பெண் தற்கொலை சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஷ்ணுஜா (25) என்ற பெண் அண்மையில் தற்கொலை செய்த நிலையில் அவர் கணவர் பிரபினை போலீசார் கைது செய்துள்ளனர். விஷ்ணுஜாவை மனதளவிலும், உடலளவிலும் பிரபின் துன்புறுத்தி வந்திருக்கிறார். நீ வேலைக்கு சென்று எனக்கான வரதட்சணையை கொடு, நீ அழகாக இல்லாததோடு பார்ப்பதற்கு பெண் போலவே இல்லை என மனைவியிடம் பிரபின் கூறியது தெரியவந்துள்ளது.