த.வெ.க மாநாட்டிற்கு சென்றவர் ரயில் விபத்தில் பலி

60பார்த்தது
சென்னையில் இருந்து தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்ற நிதிஸ் குமார் என்ற இளைஞர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து ரயிலில் சென்ற 2 பேர், ரயில் விக்கிரவண்டி தாண்டியதும் மெதுவாக சென்றபோது அதிலிருந்து குதித்துள்ளனர். மாநாடு நடக்கும் திடலில் மின் விளக்குகளை பார்த்ததும் உற்சாக மிகுதியில் இருவரும் குதித்துள்ளனர். படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி