பத்மநாபபுரம் - Padmanabhapuram

மீனவரை தாக்கி மூக்குடைப்பு; 2 பேர் மீது வழக்கு

மீனவரை தாக்கி மூக்குடைப்பு; 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை ஆர் சி தெருவை சேர்ந்தவர் சகாயராஜ் (57) மீனவர்.   இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் (50) அவரது மகன் அஜித் (22) ஆகியோருக்கும் இடையே தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று(செப்.30) சகாயராஜ் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருள்தாஸ், அஜித் ஆகியோர் சேர்ந்து திடீரென சகாயராஜை  திட்டி அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவரது மூக்கில் குத்தியதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அவரை கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சகாயராஜ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார்  ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அருள்தாஸ் மற்றும் அவரது மகன் அஜித் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా