வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு

54பார்த்தது
வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு
கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில், நடைபெற்று வந்த உழவர் தின விழா கண்காட்சி நிறைவடைந்தது. நான்கு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 'டி.என்.ஏ.யூ., அக்ரிகார்ட்' இடுபொருள் விற்பனை தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், கண்காட்சியில் சிறந்த அரங்குகள் அமைத்தவர்களுக்கும் நிதியுதவி அளித்தவர்களுக்கும் விருது வழங்கி கவுரவித்தார்.

தொடர்புடைய செய்தி