குளச்சல் - Kulachal

மிடாலம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்திலும் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைத்துள்ளனர். இந்த சிலைகள் அனைத்தும் நேற்று முதல் கரைக்கப்பட்டு வருகிறது. கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் வைக்கப்பட்டு உள்ள சிலைகள், கருங்கல் கூனாலுமூடு தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இன்று மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மிடாலம் கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా