நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் குமரியில் போட்டியிட்ட விஜய்வசந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2 - வது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு இன்று குமரி மேற்கு மாவட்டம் பகுதிகளில் 2-வது நாளாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை முளகுமூடு பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று கொண்டார். செறுகோல் ஊராட்சியில் நன்றி தெரிவித்து சுற்றுபயணம் செய்த போது 100 நாள் வேலை செய்யும் பெண்கள் விஜய்வசந்த் எம். பியிடம்
3 மாதமாக தங்களுக்கு சம்பளம் பணம் வரவில்லை என தெரிவித்தனர். அவர்களிடம் சம்பளம் பண வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.