தாம்பரம் - Tambaram

மாமனாரை தாக்கிய மருமகனுக்கு காப்பு

மாமனாரை தாக்கிய மருமகனுக்கு காப்பு

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் அடுத்த கன்னிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மணி, 43. இவர், அவரது மகளை அதே பகுதியை சேர்ந்த உறவுக்காரரான விஜய், 24, என்பவருக்கு, திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து, விஜய் மாமனாரை தாக்கியுள்ளார். அப்போது, அங்கு இருந்த மைத்துனர் அர்ஜுனன், 18, அவரை தடுத்துள்ளார். இதனால், மாமனார், மைத்துனர் அர்ஜுனன் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, விஜய் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், மணி கொடுத்த புகாரின்படி, தலைமறைவாகிய விஜய்யை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் மறைந்திருந்த விஜய்யை, கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా