செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பரமன்கேணி குப்பத்தை சேர்ந்தவர் செல்வமணி, 40, கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் டி.வி.எஸ். விக்டர் இருசக்கர வாகனத்தில் தன் நண்பர் சக்திவேல், 30, என்பவருடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடப்பாக்கம் நோக்கி சென்றார். ஓதியூர் ரோஸ் ஹோட்டல் அருகே சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றது. இதில் செல்வமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக்திவேல் படுகாயமடைந்தார். சாலையில் சென்றவர்கள் சக்திவேலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார் செல்வமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.