
மறைமலைநகரில் ஆண் சடலம் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி என். ஹெச்-2 பாவேந்தர் சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகில் நேற்று காலை, இறந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்தனர். இதில், இறந்த நபர் கடந்த சில நாட்களாக, மறைமலைநகர் பகுதியில் மது போதையில் தெருக்களில் சுற்றி வந்தது தெரிந்தது. இறந்த நபர் மது போதையில் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.