மதுராந்தகத்தில் பசுமை தாயகம் சார்பில் அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டியும் சதுப்பு நில விதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமை தாயகம் சார்பில் பசுமை தாயகம் மாநில இணைச் செயலாளர் கண்ணன் தலைமையில் இன்று மதுராந்தகம் ஏரியில் சுமார் 50 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளை ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும். 2017-ல் ஒன்றிய அரசு அறிவித்த சதுப்பு நில வாரியத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். உலக தண்ணீர் தினமான மார்ச் 22ஆம் தேதியை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் இந்த தீர்மானத்தை கிராம சபையில் நிறைவேற்ற வேண்டும்.
இம்மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமப் புறங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் பசுமை தாயகம் சார்பில் நடைபெறுள்ளது. பல மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் இப்போது குப்பைக் கிடங்காக மாறிவருகின்றன. இதையும் தமிழக அரசு கண்டறிந்து குப்பைகளை அகற்றி ஏரிகளையும் நீர்நிலைகளையும் ஆழப்படுத்தி பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.