மதுராந்தகம் நகர திமுக மற்றும் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு இணைந்து ரமலான் நோன்பு சிறப்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர திமுக மற்றும் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு இணைந்து ரமலான் நோன்பு சிறப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் மதுராந்தகம் நகர செயலாளர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு நோன்பு திறப்பு பற்றியும், ரமலான் நோன்பு பற்றிய அவசியம் குறித்தும், இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்தை பற்றி பேசி ரமலான் நோன்பை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மலர்விழி, நகர இளைஞரணி அமைப்பாளர் முத்து முகமது புகாரி உள்ளிட்ட இஸ்லாமிய இன மக்கள் திமுக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.