மதுராந்தகம் அருகே தனியார் அரிசி ஆலையில் இருந்து 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், மேலவலம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா அரிசி ஆலையில், ரேஷன் அரிசை பாலீஷ் செய்து, விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பதாக, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் படி, வெங்கடேஸ்வரா அரிசி ஆலையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள், அரிசி ஆலையில் திடீரென சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் இருந்த 4 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் போது, ஆலையின் உரிமையாளர் இல்லாததால், அரிசியை மட்டும் கைப்பற்றி கொண்டு சென்றனர்.