மறைமலை நகரில் அ. தி. மு க. , வெளிநடப்பு

78பார்த்தது
மறைமலை நகரில் அ. தி. மு க. , வெளிநடப்பு
செங்கல்பட்டு மாவட்டம்
மறைமலைநகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி. மு. க. , - 14; அ. தி. மு. க. , - 5; ஐ. ஜே. கே. , - 1; சுயேட்சை - 1 என, 21 கவுன்சிலர்கள் உள்ளனர். மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை, தி. மு. க. , நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமையில், நகராட்சி கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.
இதில் 21 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரவு செலவு குடிநீர், மின் விளக்கு, மழைநீர் வடிகால்வாய் திட்டங்கள் என, 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அ. தி. மு. க. , ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட 146 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 50 சதவீதத்திற்கு மேல் முறையாக பராமரிக்கப்படவில்லை, வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக ஆன்லைன் 'டெண்டர்' விடப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் நான்கு பேர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்தி