சன்பீம் சி. பி. எஸ். இ. , பள்ளி மாணவர் முதலிடம்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, சுமைதாங்கி பகுதியில், சன்பீம் இன்டர்நேஷனல் பள்ளியின் பிளஸ் 2 வகுப்பு மாணவர் எம். ஹேமன் 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அவர் பாடம் வாரியாக ஆங்கிலம்- 96, கணிதம் 95, இயற்பியல் 95, வேதியியல் -98, மற்றும் உயிரியல் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவர் ஆர். ஏ. , வீரமணி, கம்ப்யூட்டர் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். வாலாஜா சன்பீம் பள்ளி துவங்கிய 3வது ஆண்டிலேயே மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது. வாலாஜா சன்பீம் பள்ளி மாணவி வித்யாபாரதி, சென்ற ஆண்டு நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். சாதனை மாணவர், அவரது பெற்றோர் மற்றும் வெற்றியை உருவாக்கிய ஆசிரியர்களை, சன்பீம் பள்ளிகளின் தாளாளர் முனைவர் தங்கப்பிரகாஷ் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் ஆகியோர் வாழ்த்திப் பாராட்டினர். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஹேமன், பள்ளியில் விருது வழங்கும் விழாவில் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு பெறுவார் என்றும், பரிசினை காந்தி கல்வி அறக்கட்டளையினர் வழங்க உள்ளனர்.