ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

73பார்த்தது
தொடர் விடுமுறை முடிந்து சென்னை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து செல்வதால் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

கிறிஸ்மஸ் விழா மற்றும் அரையாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தென் மாவட்டங்களை நோக்கி சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், மீண்டும் நாளை அலுவலகங்கள் செயல்பட உள்ளதால் தென் மாவட்டங்களை நோக்கிச் சென்ற பொதுமக்கள் ஒரே நாளில் சென்னையை நோக்கிப் படையெடுப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவுவாயிலாக உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலைப் போக்குவரத்துப் போலீசார் மற்றும் அச்சரப்பாக்கம் போலீசார் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி