திருக்கோவிலூர் - Tirukoilur

வீடியோஸ்


விழுப்புரம்
அரை கிலோ கஞ்சா பறிமுதல்; சென்னைஇளைஞர் கைது
Sep 18, 2024, 12:09 IST/திண்டிவனம்
திண்டிவனம்

அரை கிலோ கஞ்சா பறிமுதல்; சென்னைஇளைஞர் கைது

Sep 18, 2024, 12:09 IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் போலீசார் நேற்று (செப்., 17) ரயில் நிலையம் அருகே உள்ள காவேரிப்பாக்கம் தரைப்பால சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வந்த இளைஞரை நிறுத்த முயன்ற போது, அவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்து சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் அரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டவர் சென்னை, புளியந்தோப்பு, சிவராஜாபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் இளஞ்செழியன் (21) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.