திருக்கோவிலூர் - Tirukoilur

பச்சிளம் குழந்தை சாவு - போலீஸ் விசாரணை

பச்சிளம் குழந்தை சாவு - போலீஸ் விசாரணை

வேலுார் மாவட்டம், கலிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், (33) இவரது மனைவி பவித்ரா, (29) இவர்களுக்கு இரண்டரை வயதுடைய தேஜஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் குழந்தையுடன், நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்தவர்கள், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் நேற்று முன்தினம் (07-09-24) இரவு தங்கியுள்ளனர். நள்ளிரவு 12: 00 மணியளவில், பவித்ரா தனது குழந்தையை துாங்க வைத்துள்ளார். அதிகாலை 5: 00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, குழந்தை அசைவின்றி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை துாக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்ததை உறுதி செய்தார். வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


விழுப்புரம்