![](https://media.getlokalapp.com/cache/d4/ba/d4baa08e458e7514f96f0ae2dd3d6092.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள, அரசூர் பாரதி நகர் பகுதியில், கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, நடுத்தெருவில் மழைநீர் ஆனது தேங்கி நிற்பதால், அப்பகுதியில் சேரும் சகதியுமாக உள்ளது. இதனை அரசு சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் இன்று( ஜூலை 19) ஈடுபட்டனர்.