திருக்கோவிலூர் - Tirukoilur

மணல் கடத்திய 4 பேர் கைது: 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 4 பேர் கைது: 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்ட ராயநல்லுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று(செப்.17) அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்தியவர்கள் 9 மாட்டு வண்டிகளையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோட முன்றனர். போலீசார் தப்பியோடிய 4 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன், (26); மூர்த்தி மகன் சுரேஷ், (44); சந்திரன் மகன் தீர்த்தமலை, (50); கோவிந்தன் மகன் சர்வேஸ்வரன், (64); என தெரியவந்தது. இதையெடுத்து நான்கு பேரை கைது செய்து 9 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிந்து தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


விழுப்புரம்