லஞ்ச வழக்கில் கைதான செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'

85பார்த்தது
திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன். இவர், கடந்த 21ம் தேதி வீட்டு மனை பதிவு செய்ய தடையின்மை சான்று வழங்க விழுப்புரம், சாலாமேட்டை சேர்ந்த சேட்டு என்பவரிடம் ரூ. 1. 80 லட்சம், லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக, அவரை 'சஸ்பெண்ட்' செய்து, பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி