உடற்பயிற்சி மையத்தை திறந்துவைத்து உடற்பயிற்சி செய்த அமைச்சர்

75பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பல்வேறு அரசு திட்டபணிகளை அமைச்சர் பொன்முடி திருந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணாநகர் பகுதியில் நகர் மக்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி பின்னர் அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கெளதம சிகாமணி, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் லட்சுமணன், நகரமன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி