லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

52பார்த்தது
லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
கண்டாச்சிபுரம் மடவிளாகம் திருக்கோவிலூா் சாலையைச் சோ்ந்த சரவணன் மனைவி முத்தம்மாள் (வயது 62). இவா், வெள்ளிக்கிழமை(செப்.13) பிற்பகலில் கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்று சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது திருக்கோவிலூரிலிருந்து கண்டாச்சிபுரம் நோக்கி வந்த லாரி, முத்தம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தொடர்புடைய செய்தி