பெண் வார்டு உறுப்பினரை அடிக்க பாய்ந்த ஊராட்சி மன்ற தலைவர்

57பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் அஞ்சுகம் இவர் பஞ்சாயத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆகியோருக்கு புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வார்டு உறுப்பினர் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது இருவருக்கும் ஏற்பட்ட வார்த்தை போரில் செருப்பை கழட்டி கற்களால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி