கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் பட்டா மாற்றம், இ-பட்டா உள்ளிட்ட பல்வேறு இனங்கள் குறித்து வருவாய் நிர்வாகம் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி உள்ளனர்.