கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் குமராட்சி ஒன்றியம் கீழவன்னியூர் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் வழங்கிய உணவை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினார். படகில் சென்று மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உதவினார்.