மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயத்திற்காக உழைத்த மாடுகளுக்கு விடுமுறை வழங்கி அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பொங்கலை முன்னிட்டு மாடுகளை அலங்கரிக்க விதவிதமான கயிறுகள், கழுத்தில் தொங்கவிடும் மணிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.