
காட்டுமன்னார்கோவில்: கூடுதல் ஆய்வகம் திறந்து வைப்பு
உயர் கல்வித் துறை சார்பில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கூடுவெளிச்சாவடி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரியில் ரூ.81.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் ஆய்வகத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கல்லூரிக்கு நேரில் சென்று குத்து விளக்கு ஏற்றி வாழ்த்தினார். நிகழ்வில் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள், கூடுவெளிச்சாவடி ஊராட்சி மன்ற தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.