தமிழகத்தில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றுப் பொருட்களை வழங்க சில நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும், அப்பொருட்கள் குறித்து 2 வாரங்களுக்குள் பரிசோதித்து பார்க்க இருப்பதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் 'ஆவின்' நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், சுரேந்திரநாத் கார்த்திக், அய்யா ஆகிய சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்களுக்கு இந்த பதில் தரப்பட்டுள்ளது.