அரசுமுறைப் பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் போர்ட் லூயிஸ் சென்றடைந்தார். மார்ச் 12ஆம் தேதி மொரீஷியஸின் தேசிய தின விழாவில் அவர் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த கொண்டாட்டத்தில் இந்திய கடற்படையின் கப்பலுடன் இந்திய தற்காப்புப் படையின் குழுவும் பங்கேற்கிறது. மொரிஷியஸில் உள்ள இந்தியர்களும், அந்நாட்டு அரசு சார்பிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.