குஜராத்: பருச் நகரை சேர்ந்த ஜிதேந்திரா மற்றும் லதா ஆகிய இருவரும் ஆசிரியர்கள் ஆவர். இந்த தம்பதி சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளியான தம்பதியின் மருமகன் விவேக் என்பவரை கைது செய்தனர். ரூ. 35 லட்சம் கடன் பிரச்சனையில் இருந்த அவர் தம்பதி வீட்டில் கொள்ளையடித்துவிட்டு இந்த கொடூரத்தை செய்திருக்கிறார்.