சிங்காநல்லூர் - Singanallur

முன் விரோதம்; கோவை பாஜக நிர்வாகிக்கு வெட்டு

முன் விரோதம்; கோவை பாஜக நிர்வாகிக்கு வெட்டு

கோவை அருகே உள்ள எஸ். என். பாளையம், ஆர். ஜி. தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன் மகன் சதீஷ் (28).தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ஆர். எஸ். புரம் மண்டல பாரதிய ஜனதா கட்சி செயலாளராகவும் உள்ளார்.  இந்நிலையில் நேற்று இரவு சதீஷ் ஆர் எஸ் புரம் அருகே உள்ள மருதாச்சலம் தெருவில் உள்ள பைனான்ஸ் அலுவலகம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தது. சதீஷ் தப்பி ஓட முயன்றார். அதற்குள் அந்த கும்பல் பட்டா கத்தியால் சதீஸை சரமாரியாக வெட்டினர்.   இதில் சதீஷ்க்கு கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.   அங்கிருந்தவர்கள் சதீசை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஆர். எஸ். புரம் போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. இது குறித்து ஆர் எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా