வருவாய்த்துறை வாகனம் மோதி 2 பேர் பலி

65பார்த்தது
வருவாய்த்துறை வாகனம் மோதி 2 பேர் பலி
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா (35). இவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திருமயம் நோக்கி அரசு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, நகரத்துப்பட்டி என்ற இடத்தில் முன்னால் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்ற 2 வடமாநில இளைஞர்கள், எதிரே வந்த கோட்டாட்சியர் கார் மீது மோதி உயிரிழந்தனர். கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஓட்டுநர் காமராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், ஓட்டுநர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி