பயணிகளை ஆட்டோவில் ஏற்றிய டிரைவர் அடித்துக்கொலை

56பார்த்தது
பயணிகளை ஆட்டோவில் ஏற்றிய டிரைவர் அடித்துக்கொலை
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் அல்தீப் நேற்று வடகிமனா பஸ் நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தனியார் பஸ் ஊழியர்கள் 3 பேர், அப்துல் அல்தீப்பின் ஆட்டோவை துரத்தி சென்று இடைமறித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அப்துல் தனது ஆட்டோவிலேயே மலப்புரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி