சேலம் நகரம் - Salem City

ஆசிரியையிடம் நகை பறித்த மேலும் ஒருவர் கைது

ஆசிரியையிடம் நகை பறித்த மேலும் ஒருவர் கைது

சேலம் சூரமங்கலம் மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி(64). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் சூரமங்கலம் பகுதியில் உள்ள வங்கிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர் பத்மாவதியிடம் இருந்து 12 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது விழுப்புரத்தை சேர்ந்த மண்டை செந்தில் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், அவருடன் வந்தது மதனேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவாரூரில் பதுங்கி இருந்த அவரைப் போலீசார் நேற்று(செப்.19) கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా