சேலம் அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து ஒருவர் பலி

70பார்த்தது
சேலம் அருகே உள்ள பருத்திக்காடு பகுதியில் ஜெயக்குமார் என்பவர் கோகுல்நாத் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு குடோன் வைத்துள்ளார். இங்கு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் மற்றும் சாவு ஊர்வலத்திற்கு பயன் படுத்தப்படும் வெடிப்பொருட்கள் தயாரித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிறிய லாரி மூலம் பட்டாசு குடோனுக்கு தேவையான கரி தூள் மற்றும் பட்டாசுகள் ஆகியவற்றை கொண்டு வந்து கீழே இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கரித்துள் மூட்டை கீழே தவறி விழுந்து வெடித்துள்ளது இதனால் மற்ற பட்டாசுகளும் சரமாரியாக வெடித்தது.
இந்த தீ பட்டாசு குடோனிலும் விழுந்ததால் அங்கிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீபத்தில் சிவகாசியைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 55) மற்றும் ஓமலூரை சேர்ந்த கார்த்தி சின்னமனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மூவரையும் சேலம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியில் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி