திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் மாரியம்மன் கோயிலை புதுப்பிக்கும் பணிக்காக ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து ராஜப்பன் மகன் முனிரத்தினம் (56) என்பவர் வந்து பணி செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி பள்ளி முடிந்த பிறகு கழிவறைக்குச் சென்று திரும்பும் போது இதை கண்காணித்த காமக்கொடூரன் முனிரத்தினம் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக தெரிகிறது.
அங்கிருந்து தப்பி ஓடிய சிறுமி பெற்றோரிடம் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆத்திரமடைந்த பெற்றோர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை முனிரத்தினத்தின் மீது வழக்கு பதிந்து கைது செய்து அரசு மருத்துவமனையின் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோயிலை புதுப்பிக்கும் பணிக்காக வந்த முதியவர் சிறுமியிடம் செய்த பாலியல் சீண்டலால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.