*பாஜக அரசை கண்டித்து திமுக ஒன்றியம் சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் பாஜக மோடி அரசை கண்டத்து திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கடந்த நான்கரை மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி 4034 கோடியை தமிழ் நாட்டிற்கு வழங்காமல் தமிழ் நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசைகண்டித்து நூறு நாள் வேலை செய்யும் பெண்கள் கையில் பதாகைகள் ஏந்தி வஞ்சிக்காதே வஞ்சிக்காதே துன்புறுத்தாதே துன்புறுத்தாதே போன்ற கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு தரமாட்டோம் தமிழ் நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் நூறுநாள் பணியாளர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.