அப்பாவு அக்.18-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

76பார்த்தது
அப்பாவு அக்.18-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கில் கேள்விக்கு பதில் அளிப்பதற்காக அக்.18-ம் தேதி நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியது குறித்து அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அக்.18-ம் தேதி சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராகவிடில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி