சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை முன்னிட்டு தங்கத்தேர் வழிபாடு
காங்கேயம் அடுத்துள்ள புகழ்பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கிருத்திகை திருநாளை முன்னிட்டு காலை முதல் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது பின்னர் மாலை தங்கத்தேரில் வள்ளி தெய்வானை உன்னுடன் சுப்ரமணிய சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்தில் கலந்து கொண்டனர்.