தாராபுரத்தின் நுங்கு விற்பனை அமோகம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிக வெயிலின் தாக்கம் உள்ளதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து தினந்தோறும் நுங்கு வியாபாரிகள் உழவர் சந்தை பகுதியில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கொண்டு வரும் நுங்கு மற்றும் பதநீர் சில மணி நேரத்திற்குள் விற்பனையாகி விடுகிறது என நுங்கு வியாபாரி தெரிவிக்கின்றார். மேலும் பொதுமக்கள் நுங்கு வெயிலுக்கு ஏற்ற உணவாக உள்ளதால் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என தெரிவிக்கின்றனர்.