
திருப்பூர்: மது விற்பனையை தடுக்க வேண்டும்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கரைப்புதூர் கிராம அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தண்ணீர்பந்தல் பகுதிக்கு எல் அன்ட் டி தண்ணீர் 12 ஆண்டுகாலமாக வருவதில்லை. நிலுவை தொகையை உடனடியாக செலுத்தி தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அருள்புரத்தில் எப்.எல்.2 அனுமதி பெற்ற மனமகிழ் மன்றம் என்ற பெயரில் 2 மதுக்கடைகள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் மதுக்கடை வைக்கக்கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கடை தொடர்ந்து நடக்கிறது. உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த மதுக்கடைக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். புதிதாக திருமண மண்டபம் அருகிலும், பள்ளி அருகிலும் மதுக்கடைகள் தொடங்க ஏற்பாடு நடக்கிறது. இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் வாரம் இருமுறை குப்பையை சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர்பந்தலில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.