தாராபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்து நடத்திய பழனி பாபாவும் சமூக நீதியும் சமூகநீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம் தாராபுரம் அரசமரம் பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அப்துல் கய்யூம் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் அப்சல் வரவேற்புரை ஆற்றினார்.
தெற்கு மாவட்ட செயலாளர் முனீப் ரகுமான் முன்னிலை வகித்தார். ம.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு. விசிக மாநிலத் துணைச் செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். இதில் சமூக நீதிப் போராளி பழனிபாபாவின் 28-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது பழனிபாபா சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து தலைவர்கள் எடுத்துரைத்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் 1000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.