மணச்சநல்லூர் - Manachanallur

மணப்பாறை: தீராத வயிற்று வலி; இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

மணப்பாறை: தீராத வயிற்று வலி; இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

மணப்பாறை அருகே உள்ள எண். பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஜோசப் வயது 23 இவர் கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரக செயல் இழப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 12-ம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.  இதை அடுத்து மணப்பாறை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜோசப் அங்கிருந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று(டிச.14)  உயிரிழந்தார். இது குறித்து மணப்பாறை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా