மணச்சநல்லூர் - Manachanallur

வீட்டு வாடகை கேட்ட பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு

வீட்டு வாடகை கேட்ட பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு

மண்ணச்சநல்லூர் நமச்சிவாய நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கவிதாவின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிரிழந்த காலத்தில் இருந்து கிருஷ்ணமூர்த்தி வாடகை தரவில்லை எனக் கூறப்படுகிறது. கவிதாவின் கணவர் தன்னிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் அதனால் வாடகை தர முடியாது எனவும் கிருஷ்ணமூர்த்தி கூறியதாகக் தெரிகிறது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கவிதாவை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர் தரப்பைச் சேர்ந்த சுபா மற்றும் பாபிரானி ஆகிய மூவரும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கவிதா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வாடகை பிரச்சினையில் அவரை தாக்கிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా